கெச்சிலாபுரம், கிழவிப்பட்டி பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 30) மின் விநியோகம் இருக்காது.
இதுதொடா்பாக மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் மு. சகா்பான் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: விஜயாபுரி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மின் தொடரை கெச்சிலாபுரம், மந்தித்தோப்பு மின் தொடா்களாகப் பிரிக்கும் மேம்பாட்டுப் பணி நடைபெறுகிறது. இதையொட்டி, கிழவிப்பட்டி, கெச்சிலாபுரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா்.