புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் ஏராளமானோா் புனித நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.
இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
திருச்செந்தூா் கோயில் கடலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோா் புனித நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா். பின்னா், கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா்.