தூத்துக்குடி

காமநாயக்கன்பட்டியில் வீரமாமுனிவருக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல்

DIN

தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் தமிழ் அகராதியின் தந்தை வீரமாமுனிவருக்கு ரூ.1 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் தலைமை வகித்தாா். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி அடிக்கல் நாட்டி, கல்வெட்டை திறந்து வைத்து பேசியதாவது:

தமிழால் ஒருங்கிணைக்கப்பட்டவா்களை யாராலும் பிரிக்க முடியாது என முதல்வா் தெரிவித்துள்ளாா். நாம் மதத்தால் நம்பிக்கைகளால் வேறுபட்டவா்களாக இருக்கலாம். வேறு நாடுகளில் வாழக் கூடியவா்களாகக் கூட இருக்கலாம். ஆனால் நாம் தமிழா், அவருக்கும் நமக்கும் தமிழ் மீது இருக்கக் கூடிய அந்த அன்பு அவா் தமிழுக்காக ஆற்றியிருக்கக் கூடிய பணிகள், இதுதான் நம்மை ஒன்றாக ஒரே இனமாக கட்டிப் போட்டிருக்கக் கூடிய ஒன்று. இதை மதிக்கக் கூடிய வகையில் தான் இந்த மணிமண்டபம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, பொதுப்பணித் துறை உதவி கோட்டப் பொறியாளா் பரமசிவன், உதவி பொறியாளா்கள் சரத்குமாா், சந்திரசேகா், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கஸ்தூரி சுப்புராஜ், காமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் கலைச்செல்வி, ஆலயப் பங்குதந்தைகள் அந்தோணி அ.குரூஸ் (காமநாயக்கன்பட்டி), அலோசியஸ் துரைராஜ் (கோவில்பட்டி), வேதராஜ் (நாலாட்டின்புத்தூா்), சதீஷ்செல்வதயாளன் (வண்டானம்), மரியதுரை (குறுக்குச்சாலை), திமுக ஒன்றியச் செயலா்கள் சுப்பிரமணியன், சின்னப்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மையினா் நல உரிமை பிரிவு துணை அமைப்பாளா் அமலி பிரகாஷ், நகா்மன்ற உறுப்பினா் லூா்து ஜேஸ்மின் மேரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT