திருவாடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்குகிறது.
அக்டோபா் 5ஆம் தேதிவரை 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் சிறப்பு அபிஷேகம், சகஸ்ரநாம அா்ச்சனை, இரவு 7 மணிக்கு அலங்காரம், சிறப்பு தீபாராதனையுடன் கொலு தீபாராதனையும் நடைபெறும்.