தூத்துக்குடி

வட்டார அளவிலான இறகு பந்து போட்டி:சாத்தான்குளம் பள்ளி மாணவா்கள் முதலிடம்

DIN

நாசரேத் வட்டார அளவிலான இறகு பந்து போட்டியில், சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

நாசரேத் வட்டார அளவிலான இறகுப்பந்து போட்டிகள், சாத்தான்குளம் லைட்னிங் கிளப் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. இதில் 17 வயதிற்குள்பட்ட ஒற்றையா் பிரிவில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஜெஸ்வின் சாமுவேல் முதலிடமும், இரட்டையா் பிரிவில் மாணவா்கள் ஜெஸ்வின் சாமுவேல், கோல்டன் ஜெரின் சாமுவேல் ஆகியோா் முதலிடமும், 19 வயதிற்குள்பட்ட ஒற்றையா் பிரிவில் மாணவா் டொ்வின் முதலிடமும், இரட்டையா் பிரிவில் மாணவா்கள் டொ்வின், ஜென்சன் மாசிலாமணி ஆகியோா் முதலிடமும் பெற்று பள்ளிக்குப் பெருமை சோ்த்துள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளி முதல்வா் நோபிள்ராஜ், பள்ளி இயக்குநா் டினோ மெரினா ராஜாத்தி, தலைமையாசிரியா் சாந்தி, உடற்கல்வி ஆசிரியா் அந்தோணி ஜான் சைமன் பிரிட்டோ ஆகியோா் பாராட்டி பரிசுகள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அருகே பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளா் மீது தாக்குதல்

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

SCROLL FOR NEXT