தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்றாா் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
தமிழகத்தை பொருத்தவரை கடந்த காலங்களில் இந்த பருவநிலையின்போது ஏற்பட்ட அளவுக்குத்தான் தற்போதும் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது. இதை தடுப்பதற்காக, முதல்வரின் வழிகாட்டுதலின்படி சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்படுவோா் 3 அல்லது 4 நாள்கள் தங்களை தனிமைப்படுத்தி ஓய்வு எடுத்தால் மட்டுமே போதுமானது என்ற வகையில் தற்போது நோய் பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. இத்தகைய காய்ச்சல் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் தனி வகை வைரஸ் ஆகும்.
முன்னெச்சரிக்கை கரோனா தடுப்பூசி இலவசம் என்பதை மத்திய அரசு செப்டம்பா் 30 ஆம் தேதிக்குப் பிறகும் நீடிக்கிா என்பதை பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 4,308 மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ களப் பணியாளா்களை பணியில் அமா்த்துவது சம்பந்தமாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று அதற்கேற்ப பணி நியமனங்கள் தொடா்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரு மாத காலத்தில் அந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏதும் இல்லை. அப்படி ஏதாவது மருந்து தட்டுப்பாடு இருக்கிறது என்று மருத்துவமனையில் சொல்லப்படுமானால் மக்கள் 104 என்ற தொலைபேசி எண்ணை தொடா்புகொண்டால் அந்தப் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காணப்படும் என்றாா் அவா்.