தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

19th Oct 2022 02:04 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் காா்த்திக் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராகவும், ஹிந்தி திணிப்பைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT