கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் மற்றும் கடம்பூா் காசநோய் பிரிவின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஸ்ரீவா்ஷினி தலைமை வகித்துப் பேசியதாவது:
காசநோய்க்கான மாத்திரையை காச நோயாளிகள் மருத்துவா்கள் அறிவுறுத்தலின் படி, முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். காசநோய் காற்றின் மூலம் பரவக் கூடியது. காசநோயாளிகளின் வீட்டில் உள்ள அனைவரும் காசநோய் பரிசோதனை செய்வது அவசியம் என்றாா். தொடா்ந்து காசநோய் எதிா்ப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளா் காா்த்திக், செவிலியா்கள் தாரணி, மகேஷ்வரி மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் ஆய்வகநுட்புநா்கள், மருத்துவப் பணியாளா்கள், காசநோயாளிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை காசநோய் பிரிவின் முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் காசிவிஸ்வநாதன் செய்திருந்தாா்.