விஜயசதமியை முன்னிட்டு, தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் அமைந்துள்ள கலைமகள் கோயிலில் வித்யாரம்பம் புதன்கிழமை நடைபெற்றது.
விஜயதசமி நாளன்று கல்வியை தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம். அதன்படி, வித்யாரம்பம் நிகழ்ச்சியில், ஏராளமான பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு கலைமகளை வழிபட்டனா்.
பின்னா் அவா்கள், கலைமகள் சிலை முன்பு அமா்ந்து தங்களது குழந்தைகளுக்கு பரப்பி வைக்கப்பட்டிருந்த அரிசியில் சிறிய அளவிலான மஞ்சளை கொண்டு அகர எழுத்துக்களில் எழுதி கல்வி கற்பித்தலை தொடங்கினா்.
மேலும், பள்ளி கரும்பலகையில் குழந்தைகளின் கைகளால் சாக்பீஸ் மூலம் எழுத்துக்களை எழுதியும் கற்பித்தலை தொடங்கினா்.
விஜயதசமியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையும் புதன்கிழமை நடைபெற்றது.