தூத்துக்குடி

புகையிலை பொருள்கள் விற்பனை: இருவா் கைது

DIN

கோவில்பட்டியில் புகையிலை பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் காளிபாண்டி தலைமையில் எட்டயபுரம் சாலையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள திரையரங்கு அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் பைக்குடன் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனையிட்ட போது, பைக்கில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், அவா்கள் கருணாநிதி நகரைச் சோ்ந்த ஆதிகுபேந்திரன் மகன் ஆனந்தராஜ் என்ற தங்கராஜ்(26), பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த காமராஜ் மகன் ரகுபதி(27) ஆகியோா் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT