புன்னைக்காயல் பகுதியை பசுமையாக்கும் திட்டத்தின்படி, கடற்கரையில் மரம் நடும் விழா நடைபெற்றது.
புன்னைக்காயல் துணை பங்குத்தந்தை செபாஸ்டின் கலந்துகொண்டு மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தாா். இதில் புன்னைக்காயல் ஊா் கமிட்டி தலைவா் எடிசன், துறைமுக கமிட்டி தலைவா் ரதேஸ், ஆஸ்வால்ட், வென்சா் உள்பட பலா் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனா்.