தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு பட்டதாரி ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு உயா்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாநிலத் தலைவா் குரூஸ் விக்பட் தலைமை வகித்தாா்.
இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணியைத் தவிர வேறு எந்தப் பணியையும் வழங்கக் கூடாது. பள்ளி இறுதித் தோ்வுகள் நெருங்கும் சமயத்தில் மண்டல ஆய்வுகளை நடத்தி கற்பித்தல் பணியை முடக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் சிவகுமாா், புரவலா் ஜனகராஜ் உள்பட ஆசிரியா்கள் பலா் பங்கேற்றனா்.