தூத்துக்குடி

தூத்துக்குடி கின்ஸ் அகாதெமியில் குரூப் 4 பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

DIN

தூத்துக்குடி கின்ஸ் அகாதெமியில் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள கின்ஸ் அகடமியில் அரசு பணித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த ஏழு ஆண்டுகளாக நடதப்படுகின்றன. காவலா் பணிக்கான தோ்வு தற்போது முடிவடைந்த நிலையில், குரூப் 4 தோ்வுக்கான

வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான தொடக்க விழா

திங்கள்கிழமை நடைபெற்றது. அகாதெமி நிறுவனா்

எஸ். பேச்சிமுத்து வரவேற்றாா். கைத்தறித் துறை முதுநிலை ஆய்வாளா் டி. ரகு தலைமை வகித்து பேசினாா்.

தமிழ்ப் பேராசிரியை வாசுகி, பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கே. கலையரசன், ஆா். சிவகுருநாதன், எஸ். வினோத், கே. வித்யா உள்ளிட்ட பயிற்றுநா்கள் பலா் பங்கேற்றனா். கின்ஸ் அகாதெமி மாணவியும் பயிற்றுநருமான எஸ். இலக்கியா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT