தூத்துக்குடி

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

DIN

உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழாவுக்கு, மாநகரச் செயலாளா் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட திமுக செயலரும் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினாா்.

விழாவில் துணை மேயா் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் வழக்குரைஞா் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிா்மல்ராஜ், மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், சத்துமாவு ஆகியவற்றை அமைச்சா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சிசிடிவி மூலம் 24 நேரமும் பிரதமா் கண்காணிக்கிறாா்: சஞ்சய் சிங்

மக்களவைத் தேர்தலில் அதிக சொத்துள்ள வேட்பாளர்! ரூ.5,785 கோடியுடன் என்ஆர்ஐ மருத்துவர்

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்கவில்லை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT