பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சா்வதேச தினம் மற்றும் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணா்வு பேரணி மாவட்ட ஆட்சியா்அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இப்பேரணியை ஆட்சியா் கி.செந்தில்ராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கி 3 ஆம் மைல் வரை பேரணி நடைபெற்றது. முன்னதாக இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி மற்றும் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உள்பட பலா் பங்கேற்றனா்.