தூத்துக்குடி டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை சாா்பில் நீரிழிவு நோய் தின விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பேரணியை தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் சத்தியராஜ் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் பொ்னாா்டு ஆல்பா்ட் ராஜ்குமாா், மருத்துவா்கள் சக்திவேல், அஜய் சந்தோஷ் டேவிட் ஆகியோா் பங்கேற்றனா்.
அகா்வால் கண் மருத்துவமனையில் இருந்து தொடங்கிய பேரணி, விவிடி சிக்னல் வரை சென்று மீண்டும் மருத்துவமனையில் நிறைவடைந்தது. இப்பேரணியில் புனித அன்னை செவிலியா் கல்லூரி மாணவியா், மருத்துவமனை ஊழியா்கள் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பங்கேற்றனா்.