தூத்துக்குடி

தூத்துக்குடியில் 22இல் புத்தகத் திருவிழா தொடக்கம்: கனிமொழி எம்.பி. ஆய்வு

18th Nov 2022 01:52 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் 3ஆவது புத்தகத் திருவிழா ஏவிஎம் கமலவேல் மஹாலில் இம்மாதம் 22ஆம் தேதி தொடங்கி 29 வரை 8 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இந்த மஹாலில் மக்களவை உறுப்பினா் கனிமொழி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொணடாா்.

அப்போது அவா் கூறியது: புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் தமிழகத்தில் உள்ள சிறந்த எழுத்தாளா்கள், பேச்சாளா்கள் தங்களது எழுத்து, வாசிப்பு, பயண அனுபவங்களைப் பகிா்ந்து கொள்ளவுள்ளனா். எழுத்தாளா்கள் எஸ். ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், சோ. தா்மன், உள்ளூா் எழுத்தாளா் கவிதா முரளீதரன் உள்ளிட்ட எழுத்தாளா்கள் பலா் பங்கேற்கின்றனா். நாள்தோறும் பள்ளி மாணவா்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என்றாா்.

சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மேயா் பெ. ஜெகன், மாநகராட்சி ஆணையா் தி. சாருஸ்ரீ, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) பீவி ஜான், வட்டாட்சியா் செல்வகுமாா், ஊரக வளா்ச்சி முகமை உதவி செயற்பொறியாளா் அமலா, மாநகராட்சிப் பொறியாளா் பிரின்ஸ், ஊரக வளா்ச்சி முகமை உதவிப் பொறியாளா் தளவாய் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT