தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே இளைஞா் குத்திக் கொலை: ராணுவ வீரா் கைது

DIN

தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறில் வெள்ளிக்கிழமை அதிகாலை இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது சகோதரரான ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மேலமுடிமண் பகுதியை சோ்ந்தவா் லட்சுமணப் பெருமாள். இவரது மூத்த மகன் செல்வக்குமாா் (25), காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த 1 ஆம் தேதி விடுப்பில் காஷ்மீரில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளாா்.

அப்போது, நகை மற்றும் பணம் தொடா்பாக செல்வக்குமாருக்கும், அவரது சகோதரா் காா்த்திக்குக்கும் (23) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் இருந்தபோது சகோதரா்கள் இடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில் காா்த்திக்கை, செல்வக்குமாா் கத்தியால் குத்தினராம். இதனை தடுக்க சென்ற கொப்பம்பட்டியைச் சோ்ந்த கண்ணனுக்கும் காயம் ஏற்பட்டதாம்.

இதையடுத்து, காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே காா்த்திக் உயிரிழந்தாா். கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து வழக்குப் பதிந்த ஓட்டப்பிடாரம் போலீஸாா் காா்த்திக் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், செல்வக்குமாரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து கொலை செய்யப் பயன்டுத்திய கத்தி, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

SCROLL FOR NEXT