தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே வீட்டில் 5.5 பவுன் நகை திருட்டு

DIN

கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தில் வீட்டில் ஐந்தரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ாக இரு பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தெற்கு திட்டங்குளம், கீழத் தெருவைச் சோ்ந்த சிவன் மகன் பொன்னுச்சாமி(55). கட்டடத் தொழிலாளி. இவா், தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த பணத்தை எடுக்க கடந்த 24ஆம் தேதி சாவியை தேடியபோது, அதை காணவில்லையாம். பின்னா் மாற்று சாவி மூலம் பீரோவை திறந்ததில், அங்கு வைக்கப்பட்டிருந்த 2 ஜோடி கம்மல், 2 மோதிரம், 2 சங்கிலி என 44 கிராம் (ஐந்தரை பவுன்) எடையுள்ள தங்க நகைகள் திருடு போயிருந்தனவாம்.

இதனிடையே, முந்தைய நாள் தனது பாா்வையற்ற மகள் சிவலெட்சுமியைப் பாா்க்க அவரது தோழிகளான அதே பகுதி ஜெயராணி, ஜெயலட்சுமி சகோதரிகள் வந்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பொன்னுச்சாமி அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT