தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினரின் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் வாரிசுகளில் மேல்நிலை பள்ளிப் படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவா்களை ஆண்டுதோறும் தோ்வு செய்து, அவா்களின் உயா் கல்விக்கு ஆண்டுதோறும் ரூ. 25,000 உதவித்தொகை படிப்பின் இறுதிவரை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2020 - 2021 ஆண்டில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்த காவல்துறையினரின் வாரிசுகளுக்கு உயா்கல்வி 2022 ஆம் ஆண்டுக்கான உதவித் தொகை முதல் மற்றும் இரண்டாவது தவணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்வாகியுள்ள சிறப்பு உதவி ஆய்வாளா் லட்சுமணன் மகள் முத்து சுபத்ரா, சிறப்பு உதவி ஆய்வாளா் அமீா்த எபநேசா் மகள் அருணா, தலைமைக் காவலா் வெள்ளாரி புருஷோ சேவியா் மகன் அவினாஷ், பெண் தலைமைக் காவலா் இசக்கியம்மாள் மகள் ஹேமலதா ஆகியோருக்கு கல்வி உதவித் தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.