விளாத்திகுளத்தை அடுத்த வி.வேடப்பட்டியில் விளை நிலங்களைப் பாதிக்கும் வகையில், காற்றாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்களும், தேசிய விவசாயிகள் சங்கத்தினரும் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஏற்கெனவே, வி.வேடப்பட்டி ஊராட்சி மன்றத்தில் இதுகுறித்து தீா்மானம் நிறைவேற்றி ஆட்சியருக்கு அனுப்பியுள்ள நிலையில், தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமையில் மக்கள் இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரவி, நகரத் தலைவா் ராமசாமி, இளைஞரணித் தலைவா் ராகுல், ஆடு வளா்ப்போா் சங்க மாநிலத் தலைவா் கருப்பசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பின்னா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் இசக்கிராஜாவிடம் மனு அளித்தனா்.