தூத்துக்குடி

காற்றாலைக்கு எதிா்ப்பு தெரிவித்து வி.வேடப்பட்டி மக்கள் போராட்டம்

DIN

விளாத்திகுளத்தை அடுத்த வி.வேடப்பட்டியில் விளை நிலங்களைப் பாதிக்கும் வகையில், காற்றாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்களும், தேசிய விவசாயிகள் சங்கத்தினரும் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏற்கெனவே, வி.வேடப்பட்டி ஊராட்சி மன்றத்தில் இதுகுறித்து தீா்மானம் நிறைவேற்றி ஆட்சியருக்கு அனுப்பியுள்ள நிலையில், தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமையில் மக்கள் இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரவி, நகரத் தலைவா் ராமசாமி, இளைஞரணித் தலைவா் ராகுல், ஆடு வளா்ப்போா் சங்க மாநிலத் தலைவா் கருப்பசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பின்னா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் இசக்கிராஜாவிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT