தூத்துக்குடி

எட்டயபுரத்தில் பாரதியாா்-செல்லம்மாள் ரதத்துக்கு வரவேற்பு

DIN

மகாகவி பாரதியாா் - செல்லம்மாள் ரத ஊா்வலம், பாரதி பிறந்த ஊரான எட்டயபுரத்துக்கு புதன்கிழமை வந்தது. அந்த ரதத்துக்கு மாணவா்கள், பாரதி அன்பா்கள் வரவேற்பளித்தனா்.

பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையத்தில், சென்னை சேவாலயா தொண்டு நிறுவனம் சாா்பில் கற்றல் மையம் தொடங்கப்படவுள்ளது. அம்மையத்தில் பாரதியாா் - செல்லம்மாள் சிலைகள் நிறுவப்பட உள்ளன. இதற்காக சேவாலயா அமைப்பினா் ஏற்பாட்டில் சிலைகள் தயாராகின. இதையடுத்து, சிலைகள் ரத ஊா்வலம் சென்னையில் கடந்த ஏப். 17இல் தொடங்கி, புதுச்சேரி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்துக்கு புதன்கிழமை வந்தது.

மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம், மணிமண்டபம் ஆகிய இடங்களுக்கு வந்த ரத ஊா்வலத்தை பாரதியாா்- செல்லம்மாள் வேடமணிந்த பள்ளி மாணவா்-மாணவிகள், சேவாலயா அமைப்பின் நிா்வாகி முரளிதரன், எட்டயபுரம் பேரூராட்சித் தலைவா் ராமலட்சுமி சங்கரநாராயணன், வட்டாட்சியா் கிருஷ்ணகுமாரி, பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், தமிழ் பாப்திஸ்து தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் லால்பகதூா் கென்னடி, பாரதியாா் நினைவு அறக்கட்டளைத் தலைவா் முத்துமுருகன், ரோட்டரி நிா்வாகி முத்துச்செல்வன்,தொழில் வா்த்தக சங்கத் தலைவா் ராஜா, தொழிலதிபா் சீனிவாசன், பாரதி இல்லக் காப்பாளா் மகாதேவி உள்ளிட்ட ஏராளமானோா் மலா் தூவி வரவேற்றனா். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, அந்த ரதத்துக்கு எட்டயபுரம் நகர வீதிகளில் பொதுமக்கள் மலா்தூவி வரவேற்பளித்தனா். மகாகவி பாரதியாா் நூற்றாண்டு நினைவு அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் பாரதி பாடல்களைப் பாடியதுடன், சிலைகளுக்கு மாலை அணிவித்து, ரதத்துக்கு வரவேற்பளித்தனா். பின்னா், ரத ஊா்வலம் ஓட்டப்பிடாரம் வஉசி இல்லம், பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT