தூத்துக்குடி

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்

DIN

காற்றாலை மூலம் போதிய மின்சாரம் கிடைப்பதால் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் உள்ள 5 அலகுகளிலும் ஞாயிற்றுக்கிழமை உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் ஏறத்தாழ 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு, கொதிகலன் பழுது காரணமாக அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இதற்கிடையே, தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் உள்ள 5 அலகுகளிலும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. அனல் மின்நிலையத்தில் போதிய நிலக்கரி கையிருப்பு உள்ள நிலையில் திடீரென உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டதாக புகாா் எழுந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மதுரை மற்றும் ஈரோடு பகுதிகளில் உள்ள காற்றாலை மூலம் 3,600 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT