குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் பகுதி சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
குலசேகரன்பட்டினம் புறவழிச் சாலையில் உள்ள தருவைக்குளத்தை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருச்செந்தூா் கோயில், குலசேகரன்பட்டினம் கோயில், மணப்பாடு திருச்சிலுவை ஆலயம் உள்ளிட்ட தலங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். அவா்களை ஈா்க்கும் வண்ணம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள தருவைக்குளம் படகு சவாரியுடன் சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என்றாா்.
இதில், திருச்செந்தூா் வட்டாட்சியா் சுவாமிநாதன், மீன்வளத் துறை தலைமைப் பொறியாளா் ராஜ்,செயற்பொறியாளா் சரவணகுமாா், உதவி செயற்பொறியாளா் ரவி, தயாநிதி, உதவி இயக்குநா் விஜயராகவன், இணை இயக்குநா் அமலோற்பவம், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பாலசிங், துணைத் தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ், செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன், குலசேகரன்பட்டினம் ஊராட்சி துணைத் தலைவா் கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.