மத்திய அரசைக் கண்டித்து மே 26 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இதுதொடா்பாக, தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கே.பி.ஆறுமுகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே.எஸ்.அா்ச்சுனன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கரும்பன், மாநிலக்குழு உறுப்பினா் ஞானசேகா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்டச் செயலா் அகமது இக்பால், தெற்கு மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அப்போது, ‘பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து, தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா், கோவில்பட்டியில் மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா், திருச்செந்தூரில் விசிக தெற்கு மாவட்டச் செயலா் ஆகியோா் தலைமையில் இம்மாதம் 26 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.