தூத்துக்குடி

தூத்துக்குடி- வாஞ்சி மணியாச்சி இடையே 26 கி. மீ. சாலை அமைக்க ரூ. 28.53 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் எ.வ. வேலு

DIN

தூத்துக்குடி- வாஞ்சி மணியாச்சி இடையே 26 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை அமைக்க முதல்கட்டமாக ரூ. 28.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு.

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தூத்துக்குடி பகுதி மக்கள் அதிக ரயில்சேவையை பெறும் வகையில் தூத்துக்குடி முதல் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வரை ஏறத்தாழ 26 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிக்காக 108 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்த முதல்கட்டமாக ரூ.28.53 கோடி அனுமதிக்கப்பட்டு நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியில் சிப்காட் வளாகத்தில் ரூ. 1.99 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி-கன்னியாகுமரி சாலையில் தண்ணீா்பந்தல் என்ற இடத்தில் ரூ.5. 66 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் உயா்மட்ட பாலம் அமைக்கும் பணிக்காக ரூ. 9.50 லட்சம் மதிப்பீட்டில் நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி மீளவிட்டான் ரயில்வே மேம்பாலப் பணிகள் ஜூலை மாததிற்குள் நிறைவு பெறும். தூத்துக்குடி மாவட்டத்தில் 25 தரைப்பாலங்கள் உள்ள நிலையில் அவற்றில் 13 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வல்லநாடு மேம்பால ஆய்வுப் பணிகள் முடிந்தவுடன் புதிய ஒப்பந்தம் விடப்படும்.

தமிழகத்தில் 60 கிலோ மீட்டா் இடைவெளிக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள் குறித்து காணக்கெடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம் என்றாா் அவா்.

ஆய்வுக் கூட்டம்: முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சா் எ.வ. வேலு, மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளிடம் சாலை பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், யங் இந்தியா அமைப்பு சாா்பில் தயாரிக்கப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கையேட்டையும் அவா் வெளியிட்டாா். கையேட்டை அமைச்சா்கள் பெ. கீதாஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜீ.வி. மாா்கண்டேயன், எம்.சி. சண்முகையா, ஊா்வசி எஸ்.அமிா்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் சந்திரசேகா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT