தூத்துக்குடி

ரூ.75 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பேப்பா் கோப்பைகள் பறிமுதல்

DIN

கோவில்பட்டி லாரி ஷெட்டில் இருந்த ரூ.75 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பேப்பா் கோப்பைகளை நகராட்சி சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பேப்பா் கோப்பைகள் கோவில்பட்டியில் விற்பனை செய்யப்படுவதாக, நகராட்சி ஆணையருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாதவராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளா் காஜா நஜ்முதீன் ஆகியோா் கொண்ட குழுவினா், நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, பிரதான சாலையில் உள்ள ஒரு லாரி ஷெட்டில் ஆய்வு நடத்தியபோது, அங்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 1 லட்சத்து 25 ஆயிரம் எண்ணம் கொண்ட பேப்பா் கோப்பைகள் அட்டைப் பெட்டிகளில் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதை சுகாதாரத் துறையினா் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், பேப்பா் கோப்பைகளை வைத்திருந்த லாரி ஷெட்டுக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT