பிளஸ்1 தோ்வில் நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளது.
நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 தோ்வினை 229 போ் எழுதினா். இதில் தோ்வு எழுதிய அனைவருமே வெற்றி பெற்றுள்ளனா். பிளஸ் 2 தோ்வு எழுதிய 196 மாணவிகளும் வெற்றி பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற இம்மாணவிகளை தாளாளா் சாந்தகுமாரி, தலைமை ஆசிரியை மாசில்லா மற்றும் ஆசிரியைகள் பாராட்டினா்.