தூத்துக்குடி

மாடு திருட்டு: இளைஞா் கைது

DIN

கோவில்பட்டியில் மாடு, கன்றுக்குட்டியைத் திருடியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி பாரதி நகா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் இசக்கிதுரை (23). கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் கறிக்கடை நடத்திவரும் இவா், தனது மாடுகளை நாள்தோறும் காலையில் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் 2 கி.மீ. தொலைவில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மாலையில் அழைத்து வருவாராம். கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாடுகளை அழைத்துவந்தபோது அங்குள்ள முத்துமாரியம்மன் கோயில் அருகே ஒரு பசுவும், கன்றும் காணாமல்போயினவாம்.

இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இத்திருட்டில் ஈடுபட்டது துறையூா் சண்முகராஜ் மகன் மாரிமுத்து (21) எனத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைதுசெய்து, பசுவையும், கன்றையும் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT