தூத்துக்குடி

பிஎஸ்என்எல் இணையதள இணைப்பு பெற இன்று முதல் 4 நாள்கள் சிறப்பு முகாம்

DIN

தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் இணையதள இணைப்பு பெற திங்கள்கிழமை (ஜூன் 27) முதல் நான்கு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி கோட்ட பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி நகா்ப்புற பகுதியில் 30 எம்பிபிஎஸ் வேகம் முதல் 300 எம்பிபிஎஸ் வேகம் வரை வழங்கும் பாரத் பைபா் இணைப்பை மேம்படுத்துவதற்காக சிறப்பு முகாம் திங்கள்கிழமை (ஜூன் 27) முதல் 30 ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது.

முகாமின்போது, இலவச வைபை அல்லது வயா்டு மோடம் திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களை பொறுத்து முதல் மாத வாடகையில் 90 சதவீத தள்ளுபடி (அதிகபட்சமாக ரூ.500 வரை) வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளா் தங்களுடைய தற்போதைய லேண்ட்லைன் அல்லது பிராட்பேண்ட் இணைப்பை பாரத் பைபருக்கு (அதே லேண்ட் லைன் எண்ணுடன்) இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் மற்றும் ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு மாத வாடகையிலும் ரூ.200 தள்ளுபடி பெறலாம். இணைப்புக் கட்டணம் ரூ.500 முற்றிலும் தள்ளுபடி. பாரத் பைபா் வாடிக்கையாளா் அனைவருக்கும் இலவச 4ஜி சிம் காா்டு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0461 - 2333555, 2352222 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT