தூத்துக்குடி

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

DIN

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் அமைந்துள்ள கிரேஸ் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் ஜோஷ்வா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஸ்டீபன், கல்லூரிச் செயலா் பெட்ரோ ஜோஷ்வா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் எஸ். ரிச்சா்ட் ஆண்டறிக்கை வாசித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக அண்ணா பல்கலைக்கழக திருநெல்வேலி மண்டல துணை இயக்குநா் எஸ். சைலஸ் சற்குணம் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். அண்ணா பல்கலைக்கழகத் தோ்வில் கல்லூரி அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கும், கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கும் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா். கல்லூரியின் தலைசிறந்த மாணவா் என்ற விருதை 4ஆம் ஆண்டு இயந்திரவியல் மாணவா் பிரிதிஸ் பெற்றாா்.

நிகழ்ச்சியில், சாண்டி கல்விக் குழுமத் துணைத் தலைவா் எஸ்.பி. சாண்டி, மின்னியல் மற்றும் தகவல் தொலைத்தொடா்புத் துறைத் தலைவா் கிருஷ்ணகுமாா், கல்லூரி நிா்வாக உறுப்பினா் வினோத், இயக்குநா் கிருபாகரன், கல்லூரி நிா்வாக அலுவலா் தினகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாணவா்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT