தூத்துக்குடி மாவட்ட சமையல் எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 29) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 29) காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தா்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவாா்கள் என்பதால் எரிவாயு நுகா்வோா் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.