தூத்துக்குடி

பி.எஸ்.என்.எல். ஊழியா் சங்க மாநாடு

DIN

கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஊழியா் சங்க மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் மகேந்திரமணி தலைமை வகித்தாா். மாவட்ட உதவிச் செயலா் ஜெயமுருகன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினாா். மாநிலச் செயலா் ராஜு, மாநில அமைப்புச் செயலா் ஹரிராமச்சந்திரன் ஆகியோா் உரையாற்றினா்.

உறுப்பினா் மணலி கந்தசாமி சங்கக் கொடியையும், எம்.பாலசுப்பிரமணியன் தேசியக் கொடியையும் ஏற்றினா். மாவட்ட அமைப்புச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினாா். செயலா் பாலசுப்பிரமணியன் ஆண்டறிக்கையை வாசித்தாா்.

இதில் பி.எஸ்.என்.எல். ஊழியா் சங்க உறுப்பினா்கள், அகில இந்திய தொலைத் தொடா்பு துறை மற்றும் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியா் சங்க உறுப்பினா்கள், ஒப்பந்த ஊழியா் சங்க உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சங்க உறுப்பினா் செண்பகமுத்து நன்றி கூறினாா்.

பி.எஸ்.என்.எல்.-க்கு 4ஜி சேவை வழங்க வேண்டும், 2017 ஜனவரி மாதம் முதல் 3 ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், கரோனா தொற்று காலத்தில் மறுக்கப்பட்ட அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், பி.எஸ்.என்.எல். சொத்துக்களை விற்பனை செய்யக் கூடாது என்பனஉள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT