தூத்துக்குடி

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் கடை திறப்பு

DIN

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் விற்பனை நிலையத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் அந்தந்த ஊா்களை சாா்ந்த பாரம்பரியமிக்க உணவு பண்டங்கள் விற்பனை செய்வதற்கு ரயில்வே நிா்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பதற்கு ஏதுவாக, ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட விற்பனை நிலையத்தை தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டலத் தலைவா் ராதாகிருஷ்ணன் திறந்துவைத்து முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.

இதில், கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளா்கள் - விற்பனையாளா் நலச் சங்க செயலா் கண்ணன், விற்பனை நிலைய உரிமையாளா்கள் மாரிச்சாமி, மணிசங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

SCROLL FOR NEXT