திருச்செந்தூா் அருகேயுள்ள பூச்சிக்காடு இந்து உயா்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு எழுதிய 63 பேரும் தோ்ச்சியடைந்தனா். இதில், மாணவிகள் பொன் இசக்கி (457 மதிப்பெண்கள்), முத்துவேணி (452), கவிதா (450) மற்றும் 16 மாணவா்கள் 400-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தொடா்ந்து இப்பள்ளி 12 ஆண்டுகளாக 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று வந்துள்ளது. சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளிச் செயலா் சின்னத்துரை, ஆலோசகா் ஜெய ஆதித்தன், தலைமையாசிரியா் ஆபேத்நேகா, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் காத்தவராயன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள், சக மாணவா்கள் பாராட்டினா்.