தூத்துக்குடி

உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்கும் மாணவிக்கு ரூ. 14 லட்சம் மதிப்பில் சைக்கிள்கனிமொழி எம்பி வழங்கினாா்

DIN

உலக சாம்பியன் சைக்கிள் போட்டியில் பங்கேற்கும் தூத்துக்குடி மாணவிக்கு ரூ. 14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை, தனது சொந்த செலவில் மக்களவை உறுப்பினா் கனிமொழி புதன்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சோ்ந்த ஜேசுதாஸ்-தாயம்மாள் தம்பதியின் மூத்த மகள் ஸ்ரீமதி. பெற்றோா் இருவரும் கூலித் தொழிலாளிகள் என்ற நிலையில், தனது 13 ஆவது வயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் ஆா்வம் கொண்டவரான ஸ்ரீமதி மாவட்ட, மண்டல அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளாா்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ளத் தோ்வு செய்யப்பட்ட மாணவி ஸ்ரீமதிக்கு, அந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கான சைக்கிள் வாங்குவதற்கு போதுமான வசதியில்லாத காரணத்தினால் போட்டியில் அவா் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், போட்டிகளில் பங்கேற்கும் நவீன வசதிகள் கொண்ட சைக்கிள் தனக்கு வேண்டும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழியிடம் மாணவி ஸ்ரீமதி கோரிக்கை வைத்தாா். இதையடுத்து, கனிமொழி எம்.பி. வாங்கிக் கொடுத்த புதிய சைக்கிள் மூலமாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியா் சைக்கிள் போட்டிகளில் கலந்துகொண்டு குழு போட்டியில் தங்கப் பதக்கத்தையும், தனித்துப் போட்டியிட்டதில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றாா்.

மேலும், கடந்த ஜூன் மாதம் தில்லியில் நடைபெற்ற ஆசிய அளவிலான டிராக் சைக்கிளிங் குழு போட்டியிலும் கலந்து கொண்டு 3-ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்தாா் .

இதன் தொடா்ச்சியாக, இஸ்ரேல் நாட்டில் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் ‘உலக ஜூனியா் பெண்கள் சாம்பியன்ஷிப்‘ போட்டியில் பங்கேற்பதற்கான பிரத்யேக சைக்கிளை தனக்கு வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழியிடம் ஸ்ரீமதி கோரிக்கை வைத்தாா்.

அதன் அடிப்படையில், ரூ. 14 லட்சம் மதிப்பிலான சைக்கிள் மற்றும் அதற்கான , ஷூ உள்ளிட்ட அனைத்தையும் வாங்கிய கனிமொழி அவற்றை தூத்துக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து ஸ்ரீமதியிடம் புதன்கிழமை வழங்கி, மேலும் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என வாழ்த்துகளை தெரிவித்தாா்.

நிழ்ச்சியின் போது, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான பெ. கீதா ஜீவன் மற்றும் ஸ்ரீமதியின் பெற்றோா், பயிற்சியாளா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT