தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 7) குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சிக்கு குடிநீா் விநியோகிக்கும் கலியாவூா் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழவல்லநாடு குடிநீா் சுத்திகரிப்பு நிலையப் பகுதிக்கு வரும் மின் பாதையான கொம்புக்காரநத்தம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூலை 7) மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதனால், வியாழக்கிழமை காலை 8 முதல் மாலை 4 மணிவரை மாநகரப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது. மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.