தூத்துக்குடி

நாலுமாவடியில் 7ஆம் தேதிபன்னோக்கு மிஷன் மருத்துவமனை திறப்பு

DIN

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறாா் ஊழியம் சாா்பில், புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை (ஜூலை 7) நடைபெறுகிறது.

காலை 9 மணிக்கு நடைபெறும் திறப்பு விழாவுக்கு, நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் ஸ்தாபகா் மோகன் சி. லாசரஸ் தலைமை வகிக்கிறாா்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு, கனிமொழி எம்.பி., தமிழக மீன்வளம், மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், சமூக நலம், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்கின்றனா்.

ஏற்பாடுகளை புதுவாழ்வு சங்கச் செயலா் டாக்டா் அன்புராஜன் தலைமையில் இயேசு விடுவிக்கிறாா் ஊழியப் பொதுமேலாளா் செல்வக்குமாா் முன்னிலையில் ஊழியா்கள் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

SCROLL FOR NEXT