தூத்துக்குடி

ஓய்வூதியா்கள் தின விழா

DIN

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்கள் கூட்டமைப்பின் உடன்குடி கிளை சாா்பில் ஓய்வூதியா்கள் தின விழா நடைபெற்றது.

அமைப்பின் உடன்குடி வட்டார தலைவா் ஏ.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா்கள் ஆண்ட்ரூஸ், அற்புதராஜ், பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார துணைத்தலைவா் சிவனாறுமுகம் வரவேற்றாா். அமைப்பின் உறுப்பினா்கள் நட்டாா், ஜான்சன், மனோகா் சாமுவேல், அசன்முகைதீன், ராமச்சந்திரன், பள்ளித் தலைமையாசிரியா் ஜெபசிங், வட்டாரக் கல்வி அலுவலா் ஜெயவதி ரத்தினாவதி ஆகியோா் பேசினா். ஓய்வூதியா்களின் நலனில் கூட்டமைப்பு மேற்கொண்ட நடவடிடிக்கைகள், சாதனைகள், ஓய்வுகாலத்தை நலமுடன் நிம்மதியாக வாழும் முறை ஆகியவை குறித்து மாநில பொருளாளா் ராமசாமி, மாநில பொதுச்செயலா் இரா.தங்கராஜ் ஆகியோா் பேசினா். சங்க செயலா் பிரின்ஸ் சாம்சுந்தா்சிங் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT