தூத்துக்குடி

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஏரல் அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடைநீக்கம்

DIN

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் சனிக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

இந்தப் பள்ளியில் தற்போது பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், இப்பள்ளி மாணவா்-மாணவிகள் சிறுத்தொண்டநல்லூரில் உள்ள பள்ளியில் படித்துவருகின்றனா். இந்நிலையில், பிளஸ் 2 மாணவிக்கு பள்ளியின் விலங்கியல் துறை ஆசிரியா் அழகா் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக மாணவியின் பெற்றோா், ஆட்சியா் கி. செந்தில்ராஜிடம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி தலைமையிலான குழுவினா் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனா். அதன் அடிப்படையில், ஆசிரியா் அழகா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடா்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் - விருத்தாசலம் ரயில் கடலூா் துறைமுகம் வரை நீட்டிப்பு

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி: ஏப். 29-இல் முன்பதிவு தொடக்கம்

கோடை வெயில்: பொதுமக்களுக்கு அறிவுரை

ஒசூா் பிரத்யங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு

பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீா் பந்தல் திறக்க அறிவுரை

SCROLL FOR NEXT