சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு தேவிஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் மாா்கழி மாத பௌா்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீமுத்து மாரியம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் பெண்கள் பக்தி பாடல்கள் பாடி அம்பாளை வழிபட்டனா்.