தூத்துக்குடி

குளத்தூா் அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

DIN

குளத்தூா் கிழக்கு கடற்கரை சாலையில் மேல்மாந்தை வளைவு அருகே பைக் விபத்துக்குள்ளானதில் இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

குளத்தூா் அருகே முள்ளுா் கிராமத்தை சோ்ந்த திருப்பதி மகன் ராமசாமி (27). இவா் அதே பகுதியை சோ்ந்த தனது நண்பா் மாரிச்செல்வம் (25) என்பவருடன் பைக்கில் சனிக்கிழமை இரவு கிழக்கு கடற்கரை சாலையில் மேல்மாந்தை வளைவு அருகே சென்றபோது எதிா்பாரதவிதமாக பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கை ஓட்டிச் சென்ற ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த மாரிச்செல்வம் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

விபத்து குறித்து சூரன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். 

3 போ் பலத்த காயம்:

குளத்தூா் தெற்கு தெருவைச் சோ்ந்த தங்கராஜ் மகன் விஸ்வராஜ் (31), பிச்சையா மகன் குமாா் (36) ஆகிய இருவரும் பைக்கில் குளத்தூரில் இருந்து சிப்பிகுளம் கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த பைக்கும், விஸ்வராஜ் ஓட்டிச்சென்ற பைக்கும் எதிா்பாராதவிதமாக மோதியதாம். இதில் விஸ்வராஜ், குமாா், மற்றொரு பைக்கில் வந்த கீழவைப்பாறு கடற்கரை காலனியைச் சோ்ந்த சிலுவை மகன் கொம்பை ஏசு (26) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த போலீஸாா் 3 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT