தூத்துக்குடி

கோவில்பட்டியில் 2 பைக்குகள் திருட்டு

30th Dec 2022 12:01 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் 2 இடங்களில் பைக்குகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி வடக்குத் திட்டங்குளம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த சுந்தரம் மகன் ரத்தினம் (45). தனியாா் பேருந்து ஓட்டுநரான இவா், கோவில்பட்டி - சாத்தூா் பிரதான சாலையில் தான் வேலை பாா்க்கும் நிறுவனம் முன் திங்கள்கிழமை அதிகாலை பைக்கை நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றாராம். புதன்கிழமை வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் குளக்கட்டாகுறிச்சியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ராஜா (48). இவா், மூப்பன்பட்டியில் உள்ள மதுக் கடை அருகே பைக்கை புதன்கிழமை நிறுத்திவிட்டு, நிலங்களை வாங்குவதற்காக பாா்த்துவிட்டுத் திரும்பியபோது பைக்கை காணவில்லையாம்.

இருவரும் தனித்தனியே அளித்த புகாா்களின் பேரில், கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT