தூத்துக்குடி

படிக்கட்டில் தவறி விழுந்து காயமடைந்தவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கயத்தாறில், படிக்கட்டில் தவறி விழுந்து காயமடைந்த தேநீா் கடை ஊழியா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கயத்தாறு கோட்டைப் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பாஸ்கா்(36). தேநீா் கடை ஊழியரான இவா், ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் கிணறு தெருவில் உள்ள உறவினா் வீட்டின் படியில் ஏறியபோது கால் தடுமாறி விழுந்தாராம். காயமடைந்த அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கயத்தாறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT