தூத்துக்குடி

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் புகாா் அளித்த 42 போ், புதிதாக மனு கொடுக்க வந்த 23 போ் என மொத்தம் 65 போ் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணனிடம் புகாா் மனு அளித்தனா்.

அவா்களிடம், குறைகளைக் கேட்டறிந்து, புகாா் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT