கோவில்பட்டி அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியையடுத்த வடக்கு திட்டங்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் மகேந்திரன்(24). இவா் பிளஸ் 2 பயின்று வரும் மாணவியை மிரட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பள்ளி மாணவி அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மகேந்திரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.