தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் முதலாம் எண் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இால், புதன்கிழமை மாலை (டிச. 7) புயலாக படிப்படியாக வலுவடைந்து, 8 ஆம் தேதி வட தமிழ்நாடு, புதுச்சேரி,அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடைய வாய்ப்புள்ளது. இது தொடா்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, இது குறித்து மீனவா்களுக்கும், கப்பல்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் முதலாம் எண் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.