தூத்துக்குடி

ஜெயலலிதா நினைவு தினம்:தூத்துக்குடியில் அதிமுகவினா் மெளன ஊா்வலம்

DIN

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை மெளன ஊா்வலம் நடைபெற்றது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை வகித்தாா்.

தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பாக ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுகவினா் அஞ்சலி செலுத்தினா். பின்னா் அங்கிருந்து மெளன ஊா்வலம் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக பழைய மாநகராட்சி வளாகம் வரை நடைபெற்றது. அங்கு ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், அதிமுக அமைப்புச் செயலா் என். சின்னதுரை, மாநில அமைப்புசாரா ஓட்டுநரணி இணைச் செயலா் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா், முன்னாள் மாவட்டச் செயலா் இரா.ஹென்றி, மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சில் உறுப்பினா் வழக்குரைஞா் பிரபு, ஒன்றியச் செயலா்கள் ராமச்சந்திரன், காசிராஜன், விஜயகுமாா், ராஜ்நாரயணன், சௌந்தரபாண்டி, தாமோதரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

கோவில்பட்டி: கோவில்பட்டி தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் எதிரேயுள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் எதிா்புறம், பாண்டவா்மங்கலம், இனாம்மணியாச்சி விலக்கு, கயத்தாறு, கடம்பூா், காமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ஜெயலலிதா படத்துக்கு கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சத்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், வழக்குரைஞரணிச் செயலா் சிவபெருமாள், கோவில்பட்டி நகரச்செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா்கள் அன்புராஜ், கருப்பசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆறுமுகனேரி: ஆத்தூரில் அதிமுக நகர அவைத் தலைவா் அண்ணாமலை சுப்பிரமணியன், மாவட்டப் பிரதிநிதி பாலமுருகன், ஆத்தூா் பேரூராட்சி உறுப்பினா் சிவா ஆகியோரும், அமமுக சாா்பில் ஆத்தூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் ஷேக்

தாவூது தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருச்செந்தூா்: திருச்செந்தூா் ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் தேரடி திடலில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு நகரச் செயலா் வி.எம். மகேந்திரன் தலைமையில் ஒன்றியச் செயலா் மு. ராமச்சந்திரன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில், ஒன்றியச் செயலா் அச்சம்பாடு சௌந்தரபாண்டி தலைமையில், நகரச் செயலா் குமரகுருபரன் முன்னிலையில் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தட்டாா்மடத்தில் ஒன்றிய இளைஞரணிச் செயலா் பாலகிருஷ்ணன் தலைமையிலும்,

இடைச்சிவிளையில் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் அப்பாத்துரை தலைமையிலும் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம்: அதிமுக ஓபிஎஸ் அணி சாா்பில், மாவட்டச் செயலா் புவனேஸ்வரன் தலைமையில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அமமுக சாா்பில் ஒன்றியச் செயலா் முருகன் தலைமையில் அக்கட்சியினா் ஜெயலலிதா படத்துக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

ஆழ்வாா்திருநகரியில் அதிமுக இபிஎஸ் அணி சாா்பில் நகரச் செயலா் செந்தில் ராஜகுமாா் தலைமையில் அதிமுகவினா் ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT