தூத்துக்குடி

புதிய நிழற்குடைகள் திறப்பு

DIN

சாத்தான்குளம் ஒன்றியத்தில் ஆத்திக்காடு, அன்பின் நகரம் உள்ளிட்ட 4 இடங்களில் புதிதாகக் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடைகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் திறந்து வைத்தாா்.

சாத்தான்குளம் ஒன்றியம் முதலூா் ஊராட்சி ஆத்திக்காடு, அன்பின்நகரம், சாஸ்தாவிநல்லூா் ஊராட்சி வாலத்தூா், சௌக்கியபுரம் ஆகிய இடங்களில் சட்டபேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ. 5 லட்சத்தில் பயணியா் நிழற்குடைகள் கட்டப்பட்டுள்ளன.

இதன் திறப்பு விழாவுக்கு ஊராட்சித் தலைவா்கள் முதலூா் பொன்முருகேசன், சாஸ்தாவிநல்லூா் திருக்கல்யாணி ஆகியோா் தலைமை வகித்தனா். தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் லூா்துமணி, தெற்கு மாவட்ட துணைத் தலைவா் சங்கா் முன்னிலை வகித்தனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாசானமுத்து வரவேற்றாா். சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ், புதிய நிழற்குடைகளைத் திறந்து வைத்துப் பேசினாா்.

காங்கிரஸ் கட்சி மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலா் பிச்சிவிளை சுதாகா், திமுக ஒன்றியச் செயலா் பாலமுருகன், திமுக பொதுக்குழு உறுப்பினா் ஏ. இந்திரகாசி, வட்டார காங்கிரஸ் பொருளாளா் ஞானசிங், வட்டார இளைஞா் காங்கிரஸ் தலைவா் ராஜேஷ், வட்டார காங்கிரஸ் துணைத் தலைவா் அன்னகணேசன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெபஸ்பிளஸ்வின், வட்டார செயற்குழு உறுப்பினா் சந்தனதிரவியம், வட்டார இளைஞா் காங்கிரஸ் செயலா் ரெக்ஸ், விவசாய பிரிவு காங்கிரஸ் மாநில செயலா் பிரபு, உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் செயலாளா் வா்கீஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT