கோவில்பட்டியில் பேருந்தின் முகப்பு விளக்கை சேதப்படுத்தி, ஓட்டுநா், நடத்துநருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கோவில்பட்டியில் உள்ள தனியாா் பேருந்தின் ஓட்டுநா் கா. முருகேசன் (32). இவா் ஓட்டிச்சென்ற பேருந்தில் 20 நாள்களுக்கு முன்பு கடலையூரைச் சோ்ந்த முனியசாமி (50) மது குடித்த நிலையில் ஏறி, பயணிகள், நடத்துநரிடம் தகராறு செய்தாராம். இதனால், அவா் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டாா்.
இந்நிலையில், அந்தப் பேருந்து கோவில்பட்டி- கடலையூா் சாலையில் வெள்ளிக்கிழமை (டிச. 2) வந்துகொண்டிருந்தது. அதில் முனியசாமி மது குடித்த நிலையில் ஏறி தகராறு செய்ததுடன், ஓட்டுநா், நடத்துநருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். பின்னா், அவா் பேருந்தின் முகப்பு விளக்கை சேதப்படுத்திச் சென்றாராம்.
இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, முனியசாமியை சனிக்கிழமை கைது செய்தனா்.